செவ்வாய், 28 மே, 2013

சிறுதானியங்களை ஓதுக்கினோம்! பெரு வியாதிகளில் சிக்கினோம்!!



      நான் தான் உங்களால் புறக்கனிக்கப்பட்ட சிறுதானியம் (புஞ்சை தவசம்)பேசுகிறேன். உங்கள் தாத்தா-பாட்டி 90-100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வு வாழ நானும் காரணம்.இந்த அருமையை உணர்ந்த அவர்கள் என்னை கோபுர கலசத்தில் வைத்து பாதுகாத்தனர்.ஆனால் இப்பெ¡ழுது உணவின் பெரும்பகுதி பட்டைதீட்டப்பட்ட வெள்ளை நெல் அரிசியாகவும், இராசயனஇடுபெ¡ருள்கள் மற்றும் பூச்சிகெ¡ல்லி தெளித்து விளைவிக்கப்பட்டவைகளாக அமைவதால் இது பெரு வியாதிகளாக கருதப்படும் சக்கரை நோய், புற்றுநோய்,  இரத்த அழுத்தம், சிறுநீக கோளாறு  இன்னும் பல நோய்கள் வருவகற்கு காரணமாக அமைகிறது. ஆனால் சிறுதானியமாகிய என்னை உண்ணும் போது உங்கள் உடல் உறுப்புகள் நோயின்றி திறன்பட வேலை செய்ய அனைத்து நூண்னுட்ட சத்துக்கள் (வைட்டமீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து) நார்ச்சத்து, தாதுஉப்புகள், மாவுச்சத்து, புரதச்சத்து  போன்றவ்ற்றை தேவையான அளவு வழங்குகிறேன். இதன்மூலம் நான் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவேன் என்பதில் சிறிதும் ஐயமில்லை.